மாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015
இந்தப் போட்டியானது உலகம் தழுவிய அளவில் தமிழ் திரைத்துறைக்கு ஒரு புதிய பாடலாசிரியரை இனம் காண்பதற்கான ஒரு முயற்சி. இந்தப் போட்டியானது இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக நடாத்தப்பட்டு, இரகசிய நடுவர்களால் புள்ளிகள் வழங்கப்பட்டு, அதிக சராசரிப் புள்ளி பெறுகின்றவர் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டு, அவர் எழுதும் பாடல், தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு புதிய திரைப் படத்தில் இடம்பெறும். அத்தோடு அவருக்கு பிரபல திரைக் கவிஞர்களான திரு பா.விஜய், திரு சினேகன் ஆகியோர் கையொப்பமிட்ட வாழ்த்துச் சான்றிதழும் அனுப்பி வைக்கப்படும்.