புதன், 22 ஏப்ரல், 2015

வல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு”


மாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015 

இந்தப் போட்டியானது உலகம் தழுவிய அளவில் தமிழ் திரைத்துறைக்கு ஒரு புதிய பாடலாசிரியரை இனம் காண்பதற்கான ஒரு முயற்சி. இந்தப் போட்டியானது இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக நடாத்தப்பட்டு, இரகசிய நடுவர்களால் புள்ளிகள் வழங்கப்பட்டு, அதிக சராசரிப் புள்ளி பெறுகின்றவர் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டு, அவர் எழுதும் பாடல், தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு புதிய திரைப் படத்தில் இடம்பெறும். அத்தோடு அவருக்கு பிரபல திரைக் கவிஞர்களான திரு பா.விஜய், திரு சினேகன் ஆகியோர் கையொப்பமிட்ட வாழ்த்துச் சான்றிதழும் அனுப்பி வைக்கப்படும்.

புதன், 1 ஏப்ரல், 2015

ஹைக்கூக்கள் 34





தொலைத்த கேள்விகளுக்கான தேடல் 
கையிலிருக்கின்றன பதில்கள் 
வாழ்க்கை 




மீண்டும் விரைவில் தேர்தல் வரட்டும் 
போஸ்டர் ஒட்டி பிழைக்கலாம் 
ஏழை கூலி தொழிலாளி 



உன் அன்பும்
சுகமாய் இனி(ணை)க்கின்றது 
நீ என் தம்பி.. 



இன்றும் கடின உழைப்பு, 
ஓய்வு நாளாம் மே தினம்
முதலாளிகளுக்கு 



கால தேவனின் 
பருவ கண்ணாடிகள் 
பெண்மைப் பூக்கள் 



கவிழ்ந்த மதுக்கோப்பையில்
வழிந்து சொட்டிக்கொண்டிருக்கின்றது 
உன் நினைவுகள் 



குப்பை கிண்டுவது
கோழியின் குணம் 
கிளறப்படுகின்றனர் தமிழர் 



பெருவெடிப்பினால் பிரசவம்
தவழும் குழந்தைகள் 
கவிதைகள் 



முட்கம்பி சிறைகளில் சமாதானம்
உலகெங்கும் திறப்படுகின்றன 
அகதி முகாம்கள் 



அடி பட்டாலும் 
திருந்தி கொள்ள விரும்பவில்லை 
உன் மீதான காதல் 

வல்வையூரான்.