புதன், 23 ஜூலை, 2014

கனக்கின்ற இதயங்கள்


இந்த நாள்...
ஏதோ ஒருவகை
ஏகாந்தம் கவ்விக்கொள்கின்றது
உயிரைத் தின்ற
குருதியின் நொடி

நாசியில் வட்டமிடுகின்றது
காரில் தட்டிய
வானொலியின் பாடலும்
காதில் "ஓ" என்ற
ஓலமாய் படுகின்றது
வீட்டில் ஓடவிட்ட
தொலைக்காட்சியில்
போகும் காட்சிகளையும்
கோரமாய் பிணக்குவியலாய்
காண்கிறது மனது

ஒவ்வொரு வருடமும்
இந்த நாள்
இந்த வாரம்
இந்த மாதம்
வந்து போகையில்
ஒரேவகை உணர்வுகள்
உயிர் குடித்த உணர்வுகள்
உருக்குலைந்த பிம்பங்கள்...

ஓலத்தின் வாசலாய்
சாதலின் தரிசனமாய்
ஞாலத்தின் நிதர்சனமாய்
கனக்கின்ற இதயங்களாய்
காகிதத்தில் கவிவரிகளாய்...

வல்வையூரான்.

Post Comment

1 கருத்து:

  1. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2014/08/raja-day-7.html?showComment=1409445973167#c7251801609786561377

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.