திங்கள், 31 டிசம்பர், 2012

புதுவருடம்



விடை ஒன்று கொடுத்து 
புதியதை வரவேற்று
விண்ணுக்கும் மண்ணுக்கும் 
துள்ளினர் ஒருபால்

சனி, 29 டிசம்பர், 2012

வரப்புயர்ந்தும் வாழ்வுயராமல்


மழை பெய்தது 
வயல் நிறைந்தது
உயர்த்தி கட்டிய வரப்பில்
நிறைந்து வந்தது வெள்ளம்
நிறைந்ததால் நிமிர்ந்தது 
நிறை குலை தள்ளிய 
நிறைந்த நெற்கதிர்

சனி, 22 டிசம்பர், 2012

ஹைக்கூக்கள் 5



மனங்கள் பாலையாகிப் போனதால்
காற்றில் எங்கோ பறந்து போனது
மனிதமும்.

வெள்ளி, 21 டிசம்பர், 2012

தேர் முட்டுக்கட்டை


சந்தோஷ் பருத்தித்துறை சந்தை துவிச்சக்கர வண்டி பாதுகாப்பிடத்தில் தன் துவிச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு நிமிரவும் அவன் யாழ் செல்லவேண்டிய 750 பஸ் புறப்பட்டு செல்லவும் சரியாக இருந்தது.
         "ம்...."

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

ஹைக்கூக்கள் 4





பசித்ததால் திருடி
புசித்தான் நஞ்சை
வறுமை.

சனி, 24 நவம்பர், 2012

வெள்ளி, 23 நவம்பர், 2012

கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள்



தாயின் வயிறு விட்டு 
தரணிக்கு வந்த 
தமிழ்த் தாயின் குழந்தைகள் நீங்கள்

புதன், 21 நவம்பர், 2012

ஓரிடத்தில் மாவீரரைத்துதிப்போம்


தமிழே உயிரே தலைதாழ்த்தியொரு வணக்கம்
தரணியில் உனக்கென்றொரு நாட்டுக்கென்ன சுணக்கம்
தண்ணொளி மண்ணிலின்று உன்னவர்களுக்குலில்லை இணக்கம்
தரங்கெட்ட மனிதராய் தமிழர்களுக்குள்ளே பிணக்கம்.

திங்கள், 19 நவம்பர், 2012

ஹைக்கூக்கள் 2




அப்பல்லோ இல்லை
சந்திரனையும் கடந்து
காதலர்கள்.

புதன், 14 நவம்பர், 2012

ஹைக்கூக்கள் 1



கிழிக்கப்பட்டன உடைகள்
மாறியது
நாகரீகம் 


ஞாயிறு, 11 நவம்பர், 2012

இரண்டன்றி வேறில்லை

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
தண்ணொளி நோக்கலில் தாழ்த்தி நிலம் நோக்கினாள்
பண்ணொலிப் பாடல் அவன் செவ் வாயில்
கண்ணொளி வீசி வெட்கி குனிந்தோடினாள்

புதன், 17 அக்டோபர், 2012

தித்திக்கும் வெளிநாடு



காலையில் எழுந்தேன் நேரம்
காட்டியது  ஆறு பதினைந்து
காலைக் கருமங்க ளாற்றினேன்
கன கதி வேகமாக.

செவ்வாய், 2 அக்டோபர், 2012

சிறுவர் துஸ்பிரயோகம்




சிற்றலை ஓடிவர
சிறுநண்டு குழிபுக 
சிதறுண்டு கிடந்த சோகி
சிறுகை கொண்டு சேர்த்தேன்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

தேடல்.

தேடல்கள் நீண்டாலும்
தீர்க்கமாய் முடிவெடுத்து
தேடு பொருளை சரியாய் தெரிந்து 
திசைதனையும் ஆய்ந்து

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

பட்டினி



ஒற்றையடிப் பாதை
கன்னங் கரிய இருட்டு
சில் வண்டின் ரீங்காரம்
உடலை சிலிர்க்க வைக்கும் குளிர்
தூரத்தில் கோட்டானின் கதறல்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

சந்நிதி வேலவனே

சந்நிதி வேலவனே 
சஞ்சலம் தீர்ப்பவனே
ஆலிலை அமுதுன்பவனே
அமரர்களுக் கருள் செய்பவனே

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

இளநீர்.



"என்ன சுந்தரத்தார்? பலத்த யோசனை போல!..."
கேட்டபடி திண்ணையில் வந்தமர்ந்தார் பரமசிவத்தார்.
          "அப்பிடி ஒண்டுமில்லை அண்ணே......"
சிரித்து சமாளித்தார் சுந்தரத்தார்.

சனி, 11 ஆகஸ்ட், 2012

அன்பின் நண்பனே !!!



அதிகமாய் நேசித்தேன் உன்னை - ஆனாலும்அசிங்கமாய் சோதித்தாய் என்னை.

ஆருமில்லை எனக்கென்றாய்- 
உனக்கு 
ஆன மட்டும் நானிருப்பேன் என்றேன்!!

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

கனடா பயணம்.


கனடா எண்டு கப்பல்ல கனவுகளோட வந்தம்,
கப்பல் வந்து சேர்ந்த கடற்கரை விட்டோரியா.
காலம் பார்த்தால் அதுஆ.. கஸ்டு பதின்மூன்று.
கால் வச்சது இரவு, அங்க கன பதிவுகள் பத்திரங்கள்.

வெள்ளி, 29 ஜூன், 2012

பள்ளிக்காதல்.



சந்தானத்திற்கு சந்தோசத்தில் மனம் இருப்புக் கொள்ளாமல் தவித்தது. இருக்காதா என்னஅவன் பள்ளி தோழி தனம் என்னும் தனலட்சுமிக்கு மாலையிட உள்ள பொன்னான நாளல்லவா இன்று. இன்னும் சிறிது நேரத்தில் பெண்வீட்டார் மாப்பிள்ளை அழைக்க வந்து விடுவர். 

புதன், 20 ஜூன், 2012

இலட்சியக்கனவு


அகிலனும் குமுதனும் நண்பர்கள். குமுதன் சொந்த இடம் வவுனியா. அகிலனின் சொந்த இடம் கொடிகாமம். கடந்த இரண்டு வருடங்களாக அகிலன் தன் குடும்பத்தினருடன் வவுனியா சென்று வசித்து வருகிறான். 1996 இல் இடம் பெற்ற யாழ் இடப்பெயர்வுடன் கொடிகாமத்தில் இருந்து ஆறு வயது நிரம்பிய பையனாக வன்னிக்கு பெற்றோர்களுடன் இடம் பெயர்ந்திருந்தான்.

ஞாயிறு, 27 மே, 2012

மழை காட்டும் ஒற்றுமை தமிழா





கடல் கொண்ட நீரை
கவர வந்த கள்வன்
கரு கொண்ட மேகம்

ஞாயிறு, 20 மே, 2012

மௌனம் பேசியது.



மெதுவாக கண்களைத் திறக்க முயற்சி செய்தாள் அமுதா. தலை விண் விண் என வலித்தது. காலில் வேறு பாரமாக உணர்ந்தாள். 'அட அது .... அம்மாவா?...' நீராவி படிந்த கண்ணாடியூடு பார்ப்பது போல் பார்வை தெளிவற்றிருந்தது.

இரண்டு மூன்று முறை கண்களை மூடித் திறந்தாள் அமுதா. இப்போது பார்வை சற்று தெளிவாக இருந்தது. வலியும் அதிகமாக தெரிந்தது.

" அம்... மா... "

வேதனையில் முனகினாள் அமுதா.

" பிள்ள நான் நிக்கிறன் நீ படு... "

ஆறுதலாக தடவினாள் லலிதா, அமுதாவின் தாய். மெதுவாக மீண்டும் கண்களை மூடினாள் அமுதா. அவள் நினைவுகள் எங்கோ பறந்தது. வலி தெரியாமல் இருக்க அந்த நினைவுகளில் மனதை வலிந்து புகுத்தினாள் அமுதா.

வியாழன், 17 மே, 2012

நம் கொடி அங்கே எப்போது பறக்கும்?


கொத்து கொத்தாய் தமிழர்கள்
கொன்று குவிக்கப்பட்டது இந்த மே 18
கொன்று குவித்தவன் இன்றும்
கோலோசுகின்றான் குதூகலமாய்

கொல்லப்பட்ட இனம் இன்றும்
கொண்ட வழி மறந்து மண்டியிட்டிருக்குது.

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

இவள் சுமங்கலியா?


சுவரில் இருந்த கடிகாரம் 'டாண்... டாண்...' பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. திடுக்கிட்டவளாக தன் நினைவுகளில் இருந்து மீண்டாள் சந்தியா. சாய்ந்திருந்த தூணில் இருந்து சற்று நிமிர்ந்தமர்ந்து பார்வையை சுற்றுமுற்றும் ஓடவிட்டாள்.

அவள் அருகில், அவளின் ஒரே மகனான ராஜு நன்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அடுத்த அறையில் இருந்து வரும் 'லொக்கு... லொக்கு...' இருமல் ஒலி அவள் தாயாரின் உடல் நிலையை ஊருக்குகே பறைசாற்றியது. எதிரே கண்ணாடி பிரேமினுள் இருந்து அவளது அப்பா அவளை தன் சோடப்புட்டி கண்ணாடியோடு பார்த்து சிரித்தார்.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

என் மங்கை


நதியின் ஓடம் போல - சீராய்
நமது காதல் பறக்கும்.
மதியின் முகத்தாள் கூட - மனது
மகிழ்வாய் கலந்து பிறக்கும்.

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

வல்வை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாடல்.

வல்வை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவம் 22.04.2012 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 06.05.2012 அன்று தீர்த்தோற்சவம் இடம்பெறும். அந்த தாயை துதிக்கும் முகமான பாடல் இது.
வல்வெட்டித் துறை ஓரம் - அன்னை உந்தன் சந்நிதானம்
சொல்லு நற் றழகாளே - என்னை தந்தேன் நமஸ்காரம்
கோடியாக் கரை விட்டே - கோல முத்தே வல்வை வந்தாய்
கோடி முறை துதிக்கின்றோம் - கொலுவிலுள்ள வாழ்வைத் தாயே