ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 ஜூலை, 2014

கனவுகளும் விழிக்கும் ஈழத்தில்


இளைஞர்களே கனவு காணுங்கள்
இவ்வண்ணம் கலாநிதி அப்துல்கலாம் சொன்னாராம்.
இனிப்பாய் இலட்சியமாய் கனவுகள் காண
இலட்சியத்தின் கனவுகள் எங்களுக்கும் இருக்குது.

நீண்ட மூச்சு உள் இழுத்து
நிம்மதியாய் வெளியே விட்டு
ஆழ்ந்த தூக்கம் போட
அலையாய் அலைகின்றது மனம்

அதிகாலையிலேயே எழுந்து
அரக்க பரக்க தயாராகி
அங்கொரு வேலை இங்கொரு வேலையென்று
ஆவி உருக்கி வேலைசெய்து

பாதி சம்பளம் வரியாய்க்கட்டி
மீதி அதைப் பாதி பாதியாக்கி
சாதிசனமென்று தூக்கி ஊருக்குப்பாதி...
மீதியாய் கால் சம்பளம் கையில்

கையில் இருப்பதில் காருக்கும்,
காப்புருதிக்கும், கடனாய் வாங்கிய வீட்டுக்கும்,
கணக்கில்லாமல் பெருகிய கழகங்கள் சங்கங்களுக்கும்,
கடனட்டைக்கும் கட்டியது போக கடனே கையில் மிஞ்சுது.

கடனை கஷ்டத்தை நினைத்தபடி
கண்விழித்துதிருந்து காலைப்பொழுதில் கண்மூட
கலர்கலராய் கனவு வருமென்றால்
கதிகலங்க வைத்தபடி வருகுது கனவுகளும்

காது செவிடுபடும்படி வெடிகுண்டோசைகளும்,
கலகலத்து விழுந்தழியும் கட்டிடங்களும்,
கனதியான கால்சப்பாத்துகளும் கைதுகளும்,
கண்ணீரோடு காணமல் போனோரைத்தேடும் உறவுகளும்...

இளைஞராய் இயற்கையை வென்று
இலட்சியமாய் கனவு காண முடியாமல்
இயல்பான நித்திரை இழந்து
இற்றுப்போய் நொந்துபோய் வாழும் சாதாரண பிறவிகளாய்...

இலட்சியத்தின் நெருப்பு இன்னும் இருக்குது
இனிதாய் நிறு பூத்து... நிமிர்ந்தெழும்...
இன்றில்லாவிட்டாலும் வென்றிடும் தமிழ் அன்று
இயல்பாய் எங்கள் இனிய கனவுகளும் விழிக்கும் ஈழத்தில்.

வல்வையூரான்.

புதன், 23 ஜூலை, 2014

கனக்கின்ற இதயங்கள்


இந்த நாள்...
ஏதோ ஒருவகை
ஏகாந்தம் கவ்விக்கொள்கின்றது
உயிரைத் தின்ற
குருதியின் நொடி

நாசியில் வட்டமிடுகின்றது
காரில் தட்டிய
வானொலியின் பாடலும்
காதில் "ஓ" என்ற
ஓலமாய் படுகின்றது
வீட்டில் ஓடவிட்ட
தொலைக்காட்சியில்
போகும் காட்சிகளையும்
கோரமாய் பிணக்குவியலாய்
காண்கிறது மனது

ஒவ்வொரு வருடமும்
இந்த நாள்
இந்த வாரம்
இந்த மாதம்
வந்து போகையில்
ஒரேவகை உணர்வுகள்
உயிர் குடித்த உணர்வுகள்
உருக்குலைந்த பிம்பங்கள்...

ஓலத்தின் வாசலாய்
சாதலின் தரிசனமாய்
ஞாலத்தின் நிதர்சனமாய்
கனக்கின்ற இதயங்களாய்
காகிதத்தில் கவிவரிகளாய்...

வல்வையூரான்.

திங்கள், 30 ஜூன், 2014

கண்ணீருடன் விளக்குகள்


நந்திக்கடல் சற்று மிதமாகவே
ஓலமிட்டு அழுகின்றது
காலை வானம் கூட
வழமைக்கு மாறாய்
ரத்தமாய் சிவந்து விடிகின்றது
விடிந்த வந்து சூரியனை
கரிய மேகங்கள்
கடுதியாக வந்து மறைக்கின்றன
வானத்தில் மீண்டும் வெடியோசை
மின்னல் கொடி தாவிப் படர்கின்றது
கண்ணீர்த் துளிகளாய்
ஓவென்ற அழுகுரலோடு
கோடையிலும் மழை
முல்லிவாய்க்கால் மண்
மீண்டும் ரத்த சிவப்பை
நினைத்து அலறுகின்றது

வியாழன், 17 ஏப்ரல், 2014

எங்கள் வயல்கள்



எங்கள் ஊர் வயல்களில்
நாங்கள் விதைப்பதற்று
மறுக்கப்பட்டு
முளைத்துக்கொண்டிருந்தன
நீர் முள்ளிகளும் காஞ்சோண்டிகளும்

சனி, 7 டிசம்பர், 2013

தேடித் பார்க்கின்றேன்


இன்னமும் பெரிதாக எதுவும்
இங்கு மாறிவிடவில்லை
எல்லாம் அப்படியே இருக்கின்றன

செவ்வாய், 3 டிசம்பர், 2013

கார்த்திகைத் தீபங்கள். (ஹைக்கூக்கள் 26)




வீரத்தின் விழுதுகள் 
வித்தான முத்துக்கள் 
விழிக்கும் காந்தள் கார்த்திகையில்

வியாழன், 17 அக்டோபர், 2013

புரியாத புரிதல்.


புரிதல்கள் இரண்டு
தமக்குள்
சந்தித்துக்கொண்டன

தமக்குள் புரிந்துணர்வில்லாமலே
பேசிக்கொள்ள ஆரம்பித்ததன
புரிதல்கள்;
புரிதல் பற்றியே

திங்கள், 1 ஜூலை, 2013

உடைந்த போத்தல்கள்

ஏனோ அவள் மனம் மீண்டும் மீண்டும் ஒன்றையே சுற்றி சுற்றி வந்தது. பொன் கிரகணங்களை மெதுவாக வீசி வந்த சூரியன் தன் கைகளை தென்னம் கீற்றுகளுக்கிடையில் விட்டு அவள் கன்னத்தை தொட்டதைகூட அவளால் உணர முடியாமல் இருந்தது.

புதன், 6 மார்ச், 2013

ஹைக்கூக்கள் 9




இலங்கையில் தமிழர்களுமேற்றினர் சுதந்திரதினக் கொடி
அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது
கொடி ஏற்றாதிருக்கும் சுதந்திரம் கூட.

திங்கள், 25 பிப்ரவரி, 2013

தமிழ் காத்து வாழ்வோம்




தமிழ் அழகு மொழி - அறிவு
சிறந்தோர் உதித்த மொழி
தமிழுக்கு அழகு ழகரம் - அந்த 
தமிழ் இன்று இழந்தது பல 


புதன், 13 பிப்ரவரி, 2013

இதயங்களில் ஏற்றிய பெருநெருப்பு


தடுமாற்றங்களும்
குழப்பங்களும்
நிறைந்த மன நிலை
நாம் என்ன செய்ய

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

பொங்கலோ பொங்கல்...


நாங்கள் பொங்குவோம்
பொங்கலோ பொங்கல்...
பொங்கலோ பொங்கல்...

கல்லு மூண்டு வச்ச அடுப்பில
கனதியான புது மண் பானை வச்சு
முக்குறிகளை  முழுசா அதற்கு வச்சு
பக்கத்தில கட்டோட கரும்பு வச்சு

சனி, 24 நவம்பர், 2012

வெள்ளி, 23 நவம்பர், 2012

கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள்



தாயின் வயிறு விட்டு 
தரணிக்கு வந்த 
தமிழ்த் தாயின் குழந்தைகள் நீங்கள்

புதன், 21 நவம்பர், 2012

ஓரிடத்தில் மாவீரரைத்துதிப்போம்


தமிழே உயிரே தலைதாழ்த்தியொரு வணக்கம்
தரணியில் உனக்கென்றொரு நாட்டுக்கென்ன சுணக்கம்
தண்ணொளி மண்ணிலின்று உன்னவர்களுக்குலில்லை இணக்கம்
தரங்கெட்ட மனிதராய் தமிழர்களுக்குள்ளே பிணக்கம்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

தேடல்.

தேடல்கள் நீண்டாலும்
தீர்க்கமாய் முடிவெடுத்து
தேடு பொருளை சரியாய் தெரிந்து 
திசைதனையும் ஆய்ந்து

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

பட்டினி



ஒற்றையடிப் பாதை
கன்னங் கரிய இருட்டு
சில் வண்டின் ரீங்காரம்
உடலை சிலிர்க்க வைக்கும் குளிர்
தூரத்தில் கோட்டானின் கதறல்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

சந்நிதி வேலவனே

சந்நிதி வேலவனே 
சஞ்சலம் தீர்ப்பவனே
ஆலிலை அமுதுன்பவனே
அமரர்களுக் கருள் செய்பவனே

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

இளநீர்.



"என்ன சுந்தரத்தார்? பலத்த யோசனை போல!..."
கேட்டபடி திண்ணையில் வந்தமர்ந்தார் பரமசிவத்தார்.
          "அப்பிடி ஒண்டுமில்லை அண்ணே......"
சிரித்து சமாளித்தார் சுந்தரத்தார்.

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

கனடா பயணம்.


கனடா எண்டு கப்பல்ல கனவுகளோட வந்தம்,
கப்பல் வந்து சேர்ந்த கடற்கரை விட்டோரியா.
காலம் பார்த்தால் அதுஆ.. கஸ்டு பதின்மூன்று.
கால் வச்சது இரவு, அங்க கன பதிவுகள் பத்திரங்கள்.