சனி, 7 டிசம்பர், 2013

தேடித் பார்க்கின்றேன்


இன்னமும் பெரிதாக எதுவும்
இங்கு மாறிவிடவில்லை
எல்லாம் அப்படியே இருக்கின்றன

செவ்வாய், 3 டிசம்பர், 2013

கார்த்திகைத் தீபங்கள். (ஹைக்கூக்கள் 26)




வீரத்தின் விழுதுகள் 
வித்தான முத்துக்கள் 
விழிக்கும் காந்தள் கார்த்திகையில்

திங்கள், 25 நவம்பர், 2013

தமிழன்னையின் தனையனே வாழியவே


தமிழன் என்ற இனம்
தலைகளை நிமிர்த்த
தரணியில் உதித்தான்
தானைத் தலைவன் எங்கள் கோபுர கலசம்

வியாழன், 21 நவம்பர், 2013

ஆகுதிகளுக்கு விளக்கெரிக்க...


ஆலயங்களில் மணியொலிக்க
ஆகுதிகளுக்கு விளக்கெரிக்க
தாமாகவே கண்பனிக்க
தரணியில் மீண்டுமோர் கார்த்திகை

செவ்வாய், 19 நவம்பர், 2013

காந்தள்களே வாருங்கள் (ஹைக்கூக்கள் 25)





கல்லறை கருக்கள்
கண்திறக்கும் காலம் 
காத்திருக்கின்றோம் வாருங்கள்.

செவ்வாய், 5 நவம்பர், 2013

வியாழன், 31 அக்டோபர், 2013

ஹைகூக்கள் 23.



பொருமி தவித்தன ஏதிலியாகா ஏதிலிகள்
சாவகாசமாக செருமிக்கொண்டிருக்கிறது
சர்வதேசம்

வியாழன், 17 அக்டோபர், 2013

புரியாத புரிதல்.


புரிதல்கள் இரண்டு
தமக்குள்
சந்தித்துக்கொண்டன

தமக்குள் புரிந்துணர்வில்லாமலே
பேசிக்கொள்ள ஆரம்பித்ததன
புரிதல்கள்;
புரிதல் பற்றியே

செவ்வாய், 1 அக்டோபர், 2013

காகித எழுதி.


தேர்ந்த கவி ஒருவனின் 
கைகளில் சிக்கிக்கொண்ட
காகித எழுதி
கன வேகமாக நிரப்பிக்கொண்டிருந்தது
காகிதத்தின் வெற்றிடங்களை
கனமான பொருளோடு...

திங்கள், 23 செப்டம்பர், 2013

ஹைக்கூக்கள் 22




பெற்றதாகச் சொல்லப்பட்டாலும்
இன்னும் கிடைக்கவில்லை
யாருக்கும் சுதந்திரம்.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

ஹைக்கூக்கள் 21.



துளையிடப்பட்டது புல்லாங்குழல்
வாசித்துக்கொண்டிருந்தவன்
வலியை மறந்தான்.


செவ்வாய், 3 செப்டம்பர், 2013

வலைப்பதிவர்கள் திருவிழா 2013.



எழுத்தாளர்கள் என்று
ஒரு காலம் இருந்தவர்கள் சிலரே
அந்த முறையகற்றி
வலை வழியாக
வந்த கருத்தெல்லாம் பதிந்து
நிலையாக அதனை
நிமிடதே பகிர்ந்து
நிலையுலகம் சுற்றியோர்
வலைப்பதிவர்கள்.

சனி, 31 ஆகஸ்ட், 2013

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

ஹைக்கூகள் 19


கொன்று குவித்து கொளுத்தி எரித்தபின்னும்
கொழுந்துவிட்டு எரிந்தது
சாதியம்

புதன், 31 ஜூலை, 2013

ஹைக்கூக்கள் 18


 
மலர்ந்திருந்ததை கண்டதும்
மீண்டும் மலர்ந்தது
காதல் மனது.

சனி, 13 ஜூலை, 2013

பிரச்சனைத் தீர்வு.


பல்வேறு எண்ணங்கள்
பல நூறு பிரச்சனைகள்
மண்டையில நிண்டு குடையும்

திங்கள், 1 ஜூலை, 2013

உடைந்த போத்தல்கள்

ஏனோ அவள் மனம் மீண்டும் மீண்டும் ஒன்றையே சுற்றி சுற்றி வந்தது. பொன் கிரகணங்களை மெதுவாக வீசி வந்த சூரியன் தன் கைகளை தென்னம் கீற்றுகளுக்கிடையில் விட்டு அவள் கன்னத்தை தொட்டதைகூட அவளால் உணர முடியாமல் இருந்தது.

சனி, 29 ஜூன், 2013

திருமண நாள்.

கடந்த பதினாறாம் தேதி (16.06.2013 ) எங்கள் திருமண நாள். அதையொட்டி எழுதியது... (ஆவணப்படுத்தலுக்காக இங்கே)


ஆனது தேதி பதினாறு
ஆகியது ஆண்டுன்னோடு பாதி பதினாறு

சனி, 22 ஜூன், 2013

ஹைக்கூக்கள் 17


 
படபடத்தபடி வானில் பறந்தது
பட்டம் மட்டுமல்ல
விட்டவன் மனதும்.
 

செவ்வாய், 18 ஜூன், 2013

ஹைக்கூக்கள் 16



மழை கொட்டிக்கொண்டிருக்கிறது
நாளை முற்றத்தில் வரும்
பட்டுப்பூச்சிகளும், பேய்க்காளான்களும்.




புதன், 12 ஜூன், 2013

செவ்வாய், 28 மே, 2013

ஹைக்கூக்கள் 14





முடிந்து போனது மே 18
முடியாமல்
வழிகிறது கண்ணீர்.

சனி, 18 மே, 2013

ஈழத்தை அமைக்கும் நம்பு.

 

முள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள்
முனகளுக்கிடையில் அள்ளி எடுத்தோம்  பிணங்கள்
முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்கு
முன்னேற்றமிழந்து போனது இன்றுபோல் உள்ளது

செவ்வாய், 14 மே, 2013

ஹைக்கூக்கள் 13.






நான் விழுந்ததும், வலித்தது
எனக்கல்ல
தாய்க்கு.

சனி, 11 மே, 2013

ஹைக்கூக்கள் 12

 
மாணவர் போராட்டங்கள் இந்தியாவை உலுக்கிய நேரத்தில் எழுதப்பட்டவை இந்த ஹைக்கூக்கள்.



செவ்வாய், 7 மே, 2013

ஹைக்கூக்கள் 11

கண் விழித்ததும் கைபேசி
முழு ஆக்கிரமிப்பாய் நீ
முகப்புபக்கம்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

திருமணவாழ்த்து.



கேசவன் தாரிகா 
இருவரும்
இரு மனமும் ஒரு மனமாய்
ஈருடல் ஓருயிராய்

முத்தம்.

 
பேனையை விட
எனக்கு
பென்சிலாக
இருக்க ஆசை

சனி, 27 ஏப்ரல், 2013

ஹைக்கூக்கள் 10


பார்த்து சிரித்ததால்
முறிந்தது
அடுத்த வேலியின் பூவரசந்தடி


செவ்வாய், 19 மார்ச், 2013

அகிம்சை.


ஒரு சில தசாப்தங்களுக்கு
முதல் வரை
அகிம்சை என்றால்
காந்தி என்றனர்.
அதனையே உலகும்
காந்தியம் என்றது.
காந்தி நாடு என்று
பாரதத்தை கொண்டாடியது.

செவ்வாய், 12 மார்ச், 2013

அழகு

ஏழு வயதுகள் மட்டுமே நிறைந்த 3ம் தரம் படிக்கும்  என் மகனின் முதல் கவிதை. அழகு என்ற தலைப்பில். (இந்தியா திருச்சியில் இருந்து மகளீர் தினத்தில எழுதியது.)


புதன், 6 மார்ச், 2013

ஹைக்கூக்கள் 9




இலங்கையில் தமிழர்களுமேற்றினர் சுதந்திரதினக் கொடி
அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது
கொடி ஏற்றாதிருக்கும் சுதந்திரம் கூட.