நந்திக்கடல் சற்று மிதமாகவே
ஓலமிட்டு அழுகின்றது
காலை வானம் கூட
வழமைக்கு மாறாய்
ரத்தமாய் சிவந்து விடிகின்றது
விடிந்த வந்து சூரியனை
கரிய மேகங்கள்
கடுதியாக வந்து மறைக்கின்றன
வானத்தில் மீண்டும் வெடியோசை
மின்னல் கொடி தாவிப் படர்கின்றது
கண்ணீர்த் துளிகளாய்
ஓவென்ற அழுகுரலோடு
கோடையிலும் மழை
முல்லிவாய்க்கால் மண்
மீண்டும் ரத்த சிவப்பை
நினைத்து அலறுகின்றது