மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 பிப்ரவரி, 2013

தமிழ் காத்து வாழ்வோம்




தமிழ் அழகு மொழி - அறிவு
சிறந்தோர் உதித்த மொழி
தமிழுக்கு அழகு ழகரம் - அந்த 
தமிழ் இன்று இழந்தது பல 


ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

பட்டினி



ஒற்றையடிப் பாதை
கன்னங் கரிய இருட்டு
சில் வண்டின் ரீங்காரம்
உடலை சிலிர்க்க வைக்கும் குளிர்
தூரத்தில் கோட்டானின் கதறல்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

சந்நிதி வேலவனே

சந்நிதி வேலவனே 
சஞ்சலம் தீர்ப்பவனே
ஆலிலை அமுதுன்பவனே
அமரர்களுக் கருள் செய்பவனே

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

இளநீர்.



"என்ன சுந்தரத்தார்? பலத்த யோசனை போல!..."
கேட்டபடி திண்ணையில் வந்தமர்ந்தார் பரமசிவத்தார்.
          "அப்பிடி ஒண்டுமில்லை அண்ணே......"
சிரித்து சமாளித்தார் சுந்தரத்தார்.

சனி, 11 ஆகஸ்ட், 2012

அன்பின் நண்பனே !!!



அதிகமாய் நேசித்தேன் உன்னை - ஆனாலும்அசிங்கமாய் சோதித்தாய் என்னை.

ஆருமில்லை எனக்கென்றாய்- 
உனக்கு 
ஆன மட்டும் நானிருப்பேன் என்றேன்!!

ஞாயிறு, 20 மே, 2012

மௌனம் பேசியது.



மெதுவாக கண்களைத் திறக்க முயற்சி செய்தாள் அமுதா. தலை விண் விண் என வலித்தது. காலில் வேறு பாரமாக உணர்ந்தாள். 'அட அது .... அம்மாவா?...' நீராவி படிந்த கண்ணாடியூடு பார்ப்பது போல் பார்வை தெளிவற்றிருந்தது.

இரண்டு மூன்று முறை கண்களை மூடித் திறந்தாள் அமுதா. இப்போது பார்வை சற்று தெளிவாக இருந்தது. வலியும் அதிகமாக தெரிந்தது.

" அம்... மா... "

வேதனையில் முனகினாள் அமுதா.

" பிள்ள நான் நிக்கிறன் நீ படு... "

ஆறுதலாக தடவினாள் லலிதா, அமுதாவின் தாய். மெதுவாக மீண்டும் கண்களை மூடினாள் அமுதா. அவள் நினைவுகள் எங்கோ பறந்தது. வலி தெரியாமல் இருக்க அந்த நினைவுகளில் மனதை வலிந்து புகுத்தினாள் அமுதா.

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

இவள் சுமங்கலியா?


சுவரில் இருந்த கடிகாரம் 'டாண்... டாண்...' பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. திடுக்கிட்டவளாக தன் நினைவுகளில் இருந்து மீண்டாள் சந்தியா. சாய்ந்திருந்த தூணில் இருந்து சற்று நிமிர்ந்தமர்ந்து பார்வையை சுற்றுமுற்றும் ஓடவிட்டாள்.

அவள் அருகில், அவளின் ஒரே மகனான ராஜு நன்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அடுத்த அறையில் இருந்து வரும் 'லொக்கு... லொக்கு...' இருமல் ஒலி அவள் தாயாரின் உடல் நிலையை ஊருக்குகே பறைசாற்றியது. எதிரே கண்ணாடி பிரேமினுள் இருந்து அவளது அப்பா அவளை தன் சோடப்புட்டி கண்ணாடியோடு பார்த்து சிரித்தார்.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

என் மங்கை


நதியின் ஓடம் போல - சீராய்
நமது காதல் பறக்கும்.
மதியின் முகத்தாள் கூட - மனது
மகிழ்வாய் கலந்து பிறக்கும்.

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

வல்வை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாடல்.

வல்வை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவம் 22.04.2012 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 06.05.2012 அன்று தீர்த்தோற்சவம் இடம்பெறும். அந்த தாயை துதிக்கும் முகமான பாடல் இது.
வல்வெட்டித் துறை ஓரம் - அன்னை உந்தன் சந்நிதானம்
சொல்லு நற் றழகாளே - என்னை தந்தேன் நமஸ்காரம்
கோடியாக் கரை விட்டே - கோல முத்தே வல்வை வந்தாய்
கோடி முறை துதிக்கின்றோம் - கொலுவிலுள்ள வாழ்வைத் தாயே