மழை பெய்தது
வயல் நிறைந்தது
உயர்த்தி கட்டிய வரப்பில்
நிறைந்து வந்தது வெள்ளம்
நிறைந்ததால் நிமிர்ந்தது
நிறை குலை தள்ளிய
விளைந்தது விண்ணுயர்ந்து
விளைவித்தவன் விவசாயி
உயர் விதை தேடி
உண்மை உழைப்பை
குருதியை உருக்கி
வியர்வையாய் கொட்டி
வான் பார்த்த பூமியில்
தான் பார்த்து ஆய்ந்து
நாற்று நடவு நட்டு
அங்கெ இங்கே
கடன வாங்கி
அதிகமும் இல்லாமல்
குறைச்சலும் இல்லாமல்
அளவாய் வரப்பு வெட்டி
அன்பான குழந்தைக்கு
பால் புகட்டுவது போல்
நன்றாய் நீர் விட்டு
இந்த உரம் என்று
இன்னும் கடன் வாங்கி
உழைப்பை போட்டு குழைத்து
உயர்த்திய நெற்கதிர் இது
விளைந்த நெற்கதிரை
விரைந்து அறுத்து
போரடுக்கி சூடடித்து
சம்பளம் குடுத்து
சாக்கு தைத்து எடுத்து
விற்பனைக்கு போனால்
விலை அங்கே கிடைக்காது
விற்றுவிடவே வேண்டும்
விவசாயிக்கு கடன்
தொண்டை அடைக்க நிக்குது
விற்றபின் வீடு திரும்பமுன்
வேண்டியது எல்லாம்
வாங்க முடியாமல்
வேண்டிய கடனை மட்டும்
வினயமாய் அடைத்து
வீடு சேர்கையில் வீட்டில்
நித்திய பிலாக்கணம் தான்
வரப்புயர்ந்தும் வாழ்வுயராமல்
வேதனையோடு விவசாயி.
வல்வையூரான்.
Tweet | ||||
நல்ல கவிதை.அன்பாக குழந்தைக்கு பால் புகட்டுவது போல் ம்ம்ம்ம் ஒவ்வொரு விபசாயிக்கும் ஒவ்வொரு பயிரும் குழந்தைதான்.
பதிலளிநீக்குவிவசாயிகளின் வாழ்வு எப்போதும் இப்படித்தான்...:(
பதிலளிநீக்குவரப்புயர நீருயரும்
நீருயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடியுயரக் கோன் உயர்வான்
என்னும் ஔவையார் பாட்டு அவர் காலத்துக்கு மட்டும்தான் பொருத்தம் போல்...
அருமையான கவிதை
பதிலளிநீக்குவிவசாயியின் வாழ்வு இன்று
பதிலளிநீக்குமிகப்பெரும் கொடுமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது
இயற்கையும் அரசும்....
இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பமும்
விளைச்சலுக்கான நேரடி விற்பனை இல்லாது
இடையில் இடைத்தரகர்கள் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதும்...
ஏழ்மையை காரணம் காட்டி விளைநிலத்தை
மனைநிலமாக மாற்ற மற்றொரு தரகர்களின் தொந்தரவும்...
இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் விவசாயியை தங்களின்
தரம் தாழ்த்தி நிலைமையை மோசமாக ஆக்கிகொண்டிருக்கிறது...
காலப்போக்கில் சோற்றில் கைவைக்க முடியாது போகும்...
இன்று இவர்கள் சேற்றில் இறங்கவில்லை என்றால்...
கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்...
விவசாயி நல காப்போம்...
அழகான கவிதை சகோதரரே...
விவசாயியின் நிலைமையையும் அவர்தம் உழைப்பையும்
விளைச்சலுக்காகவும் அதுதரும் பலனுக்காகவும் எவ்வளவு நாட்கள்
அவர்கள் பொறுத்திருக்க வேண்டும் என்பதையும்
மிக மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்....