வேரில் வைத்திருந்த உயிர்ப்பை
வேள்வி முடித்து நிமிர்ந்த முனிபோல்
வெய்யில் கண்டதும் வேகமாக
வெளித்தள்ளி முளைத்தன தளிர்கள்
அத்தனையும் சுள்ளிகளாய் மட்டுமாகி
அனைத்தையும் உதிர்த்துக் கொட்டி
பொட்டிழந்த விதவையாகி நின்றவை
சிங்காரித்து சிரித்தன பருவப் பெண்ணாய்
நிலம் பிளந்து
நீர் மதர்ப்பு உறிஞ்சி
மலர் முகம் காட்டின
மகிழ்வாய் சூரியனுக்கு
சோதனையும் சோகமும் கொண்டு
ஓரோரிலையாய் உதிர்த்து
சோபையை இழந்து
சோகத்தில் இருந்தவை துளிர்க்கின்றன
கடும்பனி குளிரை
கணக்கில் எடுக்காது
அதனுள் அமிழ்ந்தவை
கர்வத்தோடு முழிக்கின்றன
வசந்தகாலம் வந்தது
வளங்கள் தந்தது
வாசலுக்கு வருகின்றன மலர்கள்
வசந்தத்தின் வாசனை தரவே
ஆண்டுக்கொரு முறை
அழுது தன்னை இழந்தாலும்
மீண்டு சிரிக்கின்றன
வித்தக தன்மை கொண்ட மரங்கள்
வீழ்ந்தவர் நாங்கள்
விலைகள் பல கொடுத்தவர் நாங்கள்
வாழ்ந்தவர் நாங்கள் மாண்டு
மகிழ்வதை நிரந்தரமாகத் தொலைப்பதா
மனம் மக்கி இருக்காதே தமிழா
வசந்தகாலம் உனக்கும் கூட உண்டு
வேதனைகளை முட்டித்தள்ளி எறிந்து எழு
தாழ்ந்து நிற்கும் தரணி உனக்குக் கீழ்...
வல்வையூரான்.
Tweet | ||||
சிறந்த பாவரிகள்
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
செப்பிய வரிகள் கண்டு சிந்தை தளர்ந்தது........உண்மைதான்
அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-