சனி, 29 மார்ச், 2014

வசதியான அகதி


எங்கள் வயலில்
அறுத்த கதிரில்
எடுத்த அரிசியை

அம்மம்மா நனையவிட்டு
கல்லுரலில் தாளகதியில்
மாத்துலக்கை போட்டு
மாவாக எடுத்து
விறகடுப்பில் வறுத்து
இடியப்பம் அவித்து வைக்க

வெள்ளி, 21 மார்ச், 2014

கவியோ? (மார்ச் 21 உலக கவிதைகள் தினம்)

ற்றை வரியில் 
ஒரு சொல்லை வைத்து
செத்த சொல்லெடுத்து
சிங்காரம் பண்ணி
மற்ற வரிகளில்
மளமளவென வைத்து
மனதிலுள்ளதை
மக்கள் விளங்க
மகிழ்வாக மருவில்லாமல்
வைத்து வடித்தால்
வருவது கவியோ?...

செவ்வாய், 18 மார்ச், 2014

ஹைக்கூக்கள் 29




கோப்பியிலும் வருகின்றது
போதை
கட்டிலில் நீ தருகின்றாய்

செவ்வாய், 11 மார்ச், 2014

ஒற்றுமையால் தலை நிமிர்வோம்



மீண்டும் ஒரு பிறழ்வு
ஏற்றம் தரும் என்ற
ஏதிலிகள் நம்பிக்கையில்
ஏகாதிபத்தியத்தின் அடி
சத்தியத்திற்கும் அடி

புதன், 5 மார்ச், 2014

சேர்வோம் அன்பாய்


மனிதரை மனிதராய்
பார்க்கின்ற தன்மையை
மனிதம் கொஞ்சம் கொஞ்சமாய்
இழந்துகொண்டிருக்கின்றது

திங்கள், 24 பிப்ரவரி, 2014

புலத்து வாழ்க்கை.

மயிலிறகின் மென்மையாய் 
கன்னத்தை வருடிய காற்று
சடசடத்த மழைத்துளிகளில்
துள்ளி எழுந்த மண் மணம்
குண்டும் குழியுமான ரோட்டில்
கடகடத்த வண்டில் சத்தம்
கிறீச் கிறீச் சத்தத்துடன் 
இழுக்கப்படும் துலாக்கயிறு

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

கூலி

(வெட்டி பிளாக்கர்ஸ் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் சுற்றுவரை முன்னேறி பரிசைத்தவறவிட்ட சிறுகதை.)

வேக வேகமாக ஓடி வந்ததில் மூச்சிரைத்தது வதனிக்கு. வேலைக்கு வர பிந்திவிட்டது. கனகக்கா, செல்லம்மா ஆச்சி, மயிலம்மா என்று ஒரு பெரும்படையே தோட்டத்தில இறங்கிவிட்டது. இவள் மட்டும் 'லேட்'. கழுத்தில் சுற்றி போட்டிருந்த சாரத்தை (கைலி) எடுத்து போட்டிருந்த சட்டைக்கு மேலாக அவசர அவசரமாக உடுத்திக்கொண்டாள் வதனி. வேகமாக தங்கராசண்ணா பார்ப்பதற்குள்ளாக தோட்டத்துக்குள் பாய்ந்து அமர்ந்து கொண்டாள். தயாராக தான் கொண்டுவந்திருந்த வெற்றிலை சரையை எடுத்து செல்லம்மா ஆச்சியிடம் கொடுத்தாள் வதனி.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

ஹைக்கூக்கள் 28.




கைதட்டல்களுக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கின்றாய்
மயங்கிக் கொண்டிருக்கிறது உன் வீடு
பசியில்