புதன், 23 ஜூலை, 2014

கனக்கின்ற இதயங்கள்


இந்த நாள்...
ஏதோ ஒருவகை
ஏகாந்தம் கவ்விக்கொள்கின்றது
உயிரைத் தின்ற
குருதியின் நொடி

நாசியில் வட்டமிடுகின்றது
காரில் தட்டிய
வானொலியின் பாடலும்
காதில் "ஓ" என்ற
ஓலமாய் படுகின்றது
வீட்டில் ஓடவிட்ட
தொலைக்காட்சியில்
போகும் காட்சிகளையும்
கோரமாய் பிணக்குவியலாய்
காண்கிறது மனது

ஒவ்வொரு வருடமும்
இந்த நாள்
இந்த வாரம்
இந்த மாதம்
வந்து போகையில்
ஒரேவகை உணர்வுகள்
உயிர் குடித்த உணர்வுகள்
உருக்குலைந்த பிம்பங்கள்...

ஓலத்தின் வாசலாய்
சாதலின் தரிசனமாய்
ஞாலத்தின் நிதர்சனமாய்
கனக்கின்ற இதயங்களாய்
காகிதத்தில் கவிவரிகளாய்...

வல்வையூரான்.

திங்கள், 30 ஜூன், 2014

கண்ணீருடன் விளக்குகள்


நந்திக்கடல் சற்று மிதமாகவே
ஓலமிட்டு அழுகின்றது
காலை வானம் கூட
வழமைக்கு மாறாய்
ரத்தமாய் சிவந்து விடிகின்றது
விடிந்த வந்து சூரியனை
கரிய மேகங்கள்
கடுதியாக வந்து மறைக்கின்றன
வானத்தில் மீண்டும் வெடியோசை
மின்னல் கொடி தாவிப் படர்கின்றது
கண்ணீர்த் துளிகளாய்
ஓவென்ற அழுகுரலோடு
கோடையிலும் மழை
முல்லிவாய்க்கால் மண்
மீண்டும் ரத்த சிவப்பை
நினைத்து அலறுகின்றது

செவ்வாய், 24 ஜூன், 2014

ஹைக்கூக்கள் 32




உருப்படியாக உத்தரவிட்டாய்
உயிர்ப்பிருக்கிறது உன்னிடமும்
உணர்வுகளாய் நன்றிகள் ...

செவ்வாய், 3 ஜூன், 2014

ஹைக்கூக்கள் 31



மூவர்ணக் கொடியின் நடுவே
கரும் புள்ளி
தமிழின அழிப்பா?

புதன், 21 மே, 2014

ஹைக்கூக்கள் 30




கலகலத்து சிரிக்கவில்லை பிச்சைப்பாத்திரம்
குரலெடுத்து அழுகின்றன
குழந்தைகள் பசியில்.

வெள்ளி, 2 மே, 2014

சிணுங்கல்கள்


செல்ல சிணுங்கல்களோடு
மெதுவாக ஆரம்பிக்கின்றாய்
நிதானமாக சிணுங்குகின்றாய்
சின்ன சின்ன விசயங்களில்

சனி, 26 ஏப்ரல், 2014

வெட்கமாக இருக்கின்றது



வெட்கமாக இருக்கின்றது
சொல்லிக் கொண்டே
வெட்கப்படுகின்றாய்

கன்னம் சிவக்க
காதோரம் சூடேற
முன்னம் தலை குனிந்து
முகம் முறுவல் கொண்டு

சனி, 19 ஏப்ரல், 2014

நினைவும் வலியும்



வேகமான மழை நாளொன்றில்
சடசடத்தபடி விழுந்தன
பெருந்துளிகள்
மண்ணை கிளறியபடியே
படபடத்த என் மனதை
கிழிக்கும்
உன் எண்ணங்கள் தந்த
வலியை வேதனையை
மிதமாகவே உணர்ந்தேன்,