செவ்வாய், 24 ஏப்ரல், 2012

இவள் சுமங்கலியா?


சுவரில் இருந்த கடிகாரம் 'டாண்... டாண்...' பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. திடுக்கிட்டவளாக தன் நினைவுகளில் இருந்து மீண்டாள் சந்தியா. சாய்ந்திருந்த தூணில் இருந்து சற்று நிமிர்ந்தமர்ந்து பார்வையை சுற்றுமுற்றும் ஓடவிட்டாள்.

அவள் அருகில், அவளின் ஒரே மகனான ராஜு நன்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அடுத்த அறையில் இருந்து வரும் 'லொக்கு... லொக்கு...' இருமல் ஒலி அவள் தாயாரின் உடல் நிலையை ஊருக்குகே பறைசாற்றியது. எதிரே கண்ணாடி பிரேமினுள் இருந்து அவளது அப்பா அவளை தன் சோடப்புட்டி கண்ணாடியோடு பார்த்து சிரித்தார்.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

என் மங்கை


நதியின் ஓடம் போல - சீராய்
நமது காதல் பறக்கும்.
மதியின் முகத்தாள் கூட - மனது
மகிழ்வாய் கலந்து பிறக்கும்.

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

வல்வை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாடல்.

வல்வை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவம் 22.04.2012 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 06.05.2012 அன்று தீர்த்தோற்சவம் இடம்பெறும். அந்த தாயை துதிக்கும் முகமான பாடல் இது.
வல்வெட்டித் துறை ஓரம் - அன்னை உந்தன் சந்நிதானம்
சொல்லு நற் றழகாளே - என்னை தந்தேன் நமஸ்காரம்
கோடியாக் கரை விட்டே - கோல முத்தே வல்வை வந்தாய்
கோடி முறை துதிக்கின்றோம் - கொலுவிலுள்ள வாழ்வைத் தாயே