சனி, 26 ஏப்ரல், 2014

வெட்கமாக இருக்கின்றது



வெட்கமாக இருக்கின்றது
சொல்லிக் கொண்டே
வெட்கப்படுகின்றாய்

கன்னம் சிவக்க
காதோரம் சூடேற
முன்னம் தலை குனிந்து
முகம் முறுவல் கொண்டு

சனி, 19 ஏப்ரல், 2014

நினைவும் வலியும்



வேகமான மழை நாளொன்றில்
சடசடத்தபடி விழுந்தன
பெருந்துளிகள்
மண்ணை கிளறியபடியே
படபடத்த என் மனதை
கிழிக்கும்
உன் எண்ணங்கள் தந்த
வலியை வேதனையை
மிதமாகவே உணர்ந்தேன்,

வியாழன், 17 ஏப்ரல், 2014

எங்கள் வயல்கள்



எங்கள் ஊர் வயல்களில்
நாங்கள் விதைப்பதற்று
மறுக்கப்பட்டு
முளைத்துக்கொண்டிருந்தன
நீர் முள்ளிகளும் காஞ்சோண்டிகளும்

சனி, 29 மார்ச், 2014

வசதியான அகதி


எங்கள் வயலில்
அறுத்த கதிரில்
எடுத்த அரிசியை

அம்மம்மா நனையவிட்டு
கல்லுரலில் தாளகதியில்
மாத்துலக்கை போட்டு
மாவாக எடுத்து
விறகடுப்பில் வறுத்து
இடியப்பம் அவித்து வைக்க

வெள்ளி, 21 மார்ச், 2014

கவியோ? (மார்ச் 21 உலக கவிதைகள் தினம்)

ற்றை வரியில் 
ஒரு சொல்லை வைத்து
செத்த சொல்லெடுத்து
சிங்காரம் பண்ணி
மற்ற வரிகளில்
மளமளவென வைத்து
மனதிலுள்ளதை
மக்கள் விளங்க
மகிழ்வாக மருவில்லாமல்
வைத்து வடித்தால்
வருவது கவியோ?...

செவ்வாய், 18 மார்ச், 2014

ஹைக்கூக்கள் 29




கோப்பியிலும் வருகின்றது
போதை
கட்டிலில் நீ தருகின்றாய்

செவ்வாய், 11 மார்ச், 2014

ஒற்றுமையால் தலை நிமிர்வோம்



மீண்டும் ஒரு பிறழ்வு
ஏற்றம் தரும் என்ற
ஏதிலிகள் நம்பிக்கையில்
ஏகாதிபத்தியத்தின் அடி
சத்தியத்திற்கும் அடி

புதன், 5 மார்ச், 2014

சேர்வோம் அன்பாய்


மனிதரை மனிதராய்
பார்க்கின்ற தன்மையை
மனிதம் கொஞ்சம் கொஞ்சமாய்
இழந்துகொண்டிருக்கின்றது