உரல் உலக்கைகளை கைவிட்டுவிட்டோம்
தினமும் இடிபடுகின்றோம்
ஆசையாய் கட்டினோம் மணல்வீடு
அடித்து செல்கின்றது வெள்ளம்
நாங்கள் அகதி சிறுவர்கள்
ஏழை வீட்டு ஒற்றை மலர்
பறிக்கப்படாமலே வாடுகின்றது
வரதட்சனை
அறையப்பட்ட எனக்கான சிலுவைகளை
என்றும் தனதென சுமக்குமன்பு
அம்மா
அழகுற வரையப்பட்ட ஓவியம்
கணத்தில் தாறுமாறாக கிழித்த ஓவியன்
காதல் தற்கொலை.
நல்ல விவசாய நிலத்தில்
கூட்டணியமைத்து செழித்து வளர்கிறன விழல்கள்
மக்களவைத் தேர்தல் களம்.
அடிக்கடி கனவில்
பொட்டல் மணல் பாலைவனம்
நிலத்தில் என் வீடு?
நிலவு அழுக்கடைந்துள்ளதாம்
கழுவி சுத்தப்படுத்துகின்றனர்
தேர்தல் வாக்குறுதிகளால்(????)
ரூபாய்க்களில் விசேடதரிசனம்
இறைவனைக் காணவில்லை
தருமதரிசனத்தில் இறைவன்.
ஒலித்த மந்திரத்தால்
ஒளிராத இறைவன் ஒளிர்ந்தான்
ஏழையின் மனமுருகல்
வல்வையூரான்.
Tweet | ||||
வணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குவல்வையூரார் வார்த்திட்ட வண்ணக் குறுங்கவி!
இல்லை இதற்கீடு ஏற்று!
பலதரப்பட்ட உணர்வுக் குவியலாக
அருமை உங்கள் கவிகள்!
வாழ்த்துக்கள்!
நன்றிகள் அக்கா....
நீக்கு