மெல்ல எட்டிப்பார்க்கின்றது உன் வெட்கம்
மல்லிகைப் பூவின் வாசம்போலவே
மெல்ல தவழ்கின்றது உன் புன்னகை
கொஞ்சம் அதிகமாக நிறைய ஆழமாக
உடுருவி செல்கின்றது உன் பார்வை
கண்ணாடியில் விழுந்த மழைத்துளிபோல்
வளைந்து நெளிகின்றது உன் கன்ன கூந்தல்
மெதுவாக ஆனால் மிக நிதானமாக இருக்கின்றது
எனக்குள்ளான உன் வரவு
தடதடத்த வேகத்தில் வந்த புகையிரதம்
நிலையத்தினுள் செல்கையில் காட்டும் நிதானம்
இத்தனை நிதானத்தில் ஆரம்பிக்கின்றது
உன் மீதான என் இதயத்தின் காதல்
ஆவலாகத்தான் இருக்கின்றது அறிந்துகொள்ள
என் இருப்பிடம் எப்படி உன் இதயத்தில் என்று?
வல்வையூரான்
ஒலி வடிவில் கவிதையினைக் கேட்க இங்கே சொடுக்கவும்
Tweet | ||||
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
காதல் மழைக் கவிதையில் நனைந்து விட்டேன்
பாடிய வரிகள் தித்திக்கிறது நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காதல் இருப்பிடம் இனிமை. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு