சஞ்சலம் தீர்ப்பவனே
ஆலிலை அமுதுன்பவனே
அமரர்களுக் கருள் செய்பவனே
கோலெடுத்து தண்டபாணியாய் நின்றவனே
கோபித்து ஞானப்பழ்னி சென்றவனே
மாங்கனிக்காய் மயிலேறிச் சென்றவனே
மாது வள்ளிக்காய் தினைப்புனமேறி வந்தவனே
வேதியனாய் பின் வேங்கை மரமாகி நின்றவனே
வேலாகி தொண்டைமானா ராமர்ந்தவனே
வாய்கட்டி பூசை ஏற்றவனே
வாசலெங்கும் காவடிகள் கொண்டவனே
அன்னதானக் கந்தனே
ஆற்றங்கரை அருகமர்ந்தவனே
பூவரசமரம் கொண்ட புண்ணியனே
பூசை முறைக்கு கதிர்காமம் காட்டியவனே
மருதர் கதிர்காமரோடமர்த்து கதைத்தவனே
மாசிலா முகமாறு கொண்டவனே
நெடுந்தேரேறி வந்தவனே
நேசமாய் தெய்வயானையை மணந்தவனே
புதுமைகள் எல்லாம் கொண்டவனே
புலத்திலும் எம்மை காத்தருள்வாய்
வல்வையூரான்
Tweet | ||||
வாழ்த்துக்கள் சந்நிதியானுக்கு ஒரு பாமாலை
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே. தொடர்ந்து வாருங்கள்.
நீக்குபுதுமைகள் எல்லாம் கொண்டவனே
பதிலளிநீக்குபுலத்திலும் எம்மை காத்தருள்வாய்
வரவேற்கின்றேன். தொடர்ந்து வாருங்கள் நண்பரே.
நீக்குசந்நிதியான் அற்புதத்தை தூரத்து பக்தன் எழுதுவதை விட அனுபவித்த நீங்கள் எழுதுவதே சிறப்பு
பதிலளிநீக்குவாங்கோ அப்பு குட்டி வரவேற்கின்றேன் கருத்தையும் வரவையும்.
நீக்கு