திங்கள், 4 மார்ச், 2013

கருணை.


பலமுறை அவளைப்
பார்த்ததால் எனக்கு
உண்டானது
அவள் மேல் காதல்

அவளிடம் கேட்டேன்
என்னை காதல் செய் என்று
அவள் என் கன்னம் மீது
மிதியடி தந்தாள்

இம்சை காதலால்
உழன்று நான்
இறைவனிடம் கேட்டேன்
எனக்கு கருணை செய் என்று

அவன் தந்த கருணை
மரணம்
மகிழ்வோடு அவனடி
சரணம்.
வல்வையூரான்.

Post Comment

10 கருத்துகள்:

  1. வரிகளில் மட்டும் இவை இருக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா ஒரு செருப்படிக்கே மரணமா...அவ்வ்வ்வ்...

    பதிலளிநீக்கு
  3. இனிய வணக்கம் முகுந்தன்...

    கிடைப்பதெல்லாம்...
    விதைப்பவைகளே
    விதைப்பவை எல்லாம்
    விளைபவைகளே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா.
      விளைந்ததை விபரமறிந் தருத்து
      விலை பார்த்து விற்றிட வேண்டும்.

      நீக்கு
  4. மிதியடி பெற்றதால்
    அவனடி சரணம்.. அழகான கற்பனை..
    கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  5. //பலமுறை அவளைப்
    பார்த்ததால் எனக்கு
    உண்டானது
    அவள் மேல் காதல்//

    இது மட்டும் சொந்த அனுபவமே :P

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீக்கிரம் கலியாணத்தில் முடிய வாழ்த்துக்கள் சண்முகம்... ஹஹஹ...

      நீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.