ஏழு வயதுகள் மட்டுமே நிறைந்த 3ம் தரம் படிக்கும் என் மகனின் முதல் கவிதை. அழகு என்ற தலைப்பில். (இந்தியா திருச்சியில் இருந்து மகளீர் தினத்தில எழுதியது.)
அழகு.
பறக்கும் குருவிகள் அழகு
பச்சைப்பசேல் மரங்கள் அழகு- அதில்
மலரும் மலர்கள் அழகு
உயர்ந்த மலைகள் அழகு -அதில்
வளரும் தேயிலை அழகு
நீண்ட கடல் அழகு - அதில்
விளையும் முத்து அழகு
பூக்களின் இதழ்கள் அழகு - அதில்
தேனுறிஞ்சும் தேனீ அழகு
பச்சை புல்வெளி அழகு - அதில்
மேயும் பசு அழகு
மு.ஷதுர்ஜன்.(குட்டி வல்வையூரான் )
Tweet | ||||
மேன்மைமிகு கவியீன்றாய்
பதிலளிநீக்குஅழகான மருமகனே..
ஆன்றோர்கள் கூடிநிற்கும்
சான்றோர்கள் சபைதனிலே
கோலேச்சும் மன்னவனாய்
கவிக் கோலேச்சும் மன்னவனாய்
புவிவலம் சுற்றி வா!!
வாழ்த்துக்களுடன் என் அன்பு முத்தங்கள் மருமகனுக்கு...
மிகவும் அழகு... ரசித்தேன்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்... (மு.ஷதுர்ஜன் [குட்டி வல்வையூரான்] அவர்களிடமும் சொல்லி விடுங்கள்...
உங்களின் தளம் பற்றிய சிறு அறிமுகம்
பதிலளிநீக்குகாண : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_13.html
அழகுக்கு அழகு சேர்த்த வரிகள் வாழ்த்துக்கள் கண்ணா.
பதிலளிநீக்குஅழகா எழுதியிருக்கான் குட்டி வல்வையூறான்.... சூப்பர் கவிதை... வாழ்த்துகள் சொல்லிடுங்கோ!!!
பதிலளிநீக்குகுட்டி பதினாறடி பாயும்!
பதிலளிநீக்கு