செவ்வாய், 12 மார்ச், 2013

அழகு

ஏழு வயதுகள் மட்டுமே நிறைந்த 3ம் தரம் படிக்கும்  என் மகனின் முதல் கவிதை. அழகு என்ற தலைப்பில். (இந்தியா திருச்சியில் இருந்து மகளீர் தினத்தில எழுதியது.)



அழகு.

நீல வானம் அழகு - அதில்
பறக்கும் குருவிகள் அழகு
பச்சைப்பசேல் மரங்கள் அழகு- அதில்
மலரும் மலர்கள் அழகு

உயர்ந்த மலைகள் அழகு -அதில்
வளரும் தேயிலை அழகு
நீண்ட கடல் அழகு - அதில்
விளையும் முத்து அழகு

பூக்களின் இதழ்கள் அழகு - அதில்
தேனுறிஞ்சும் தேனீ அழகு
பச்சை புல்வெளி அழகு - அதில்
மேயும் பசு அழகு


மு.ஷதுர்ஜன்.(குட்டி வல்வையூரான் )

Post Comment

6 கருத்துகள்:

  1. மேன்மைமிகு கவியீன்றாய்
    அழகான மருமகனே..
    ஆன்றோர்கள் கூடிநிற்கும்
    சான்றோர்கள் சபைதனிலே
    கோலேச்சும் மன்னவனாய்
    கவிக் கோலேச்சும் மன்னவனாய்
    புவிவலம் சுற்றி வா!!

    வாழ்த்துக்களுடன் என் அன்பு முத்தங்கள் மருமகனுக்கு...

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அழகு... ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்... (மு.ஷதுர்ஜன் [குட்டி வல்வையூரான்] அவர்களிடமும் சொல்லி விடுங்கள்...

    பதிலளிநீக்கு
  3. உங்களின் தளம் பற்றிய சிறு அறிமுகம்
    காண : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_13.html

    பதிலளிநீக்கு
  4. அழகுக்கு அழகு சேர்த்த வரிகள் வாழ்த்துக்கள் கண்ணா.

    பதிலளிநீக்கு
  5. அழகா எழுதியிருக்கான் குட்டி வல்வையூறான்.... சூப்பர் கவிதை... வாழ்த்துகள் சொல்லிடுங்கோ!!!

    பதிலளிநீக்கு
  6. குட்டி பதினாறடி பாயும்!

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.