சனி, 27 ஏப்ரல், 2013

ஹைக்கூக்கள் 10


பார்த்து சிரித்ததால்
முறிந்தது
அடுத்த வேலியின் பூவரசந்தடி




மங்கலம் பாடிக்கொண்டிருந்தாள் மனைவி மங்களம்
தலையாட்டிக்கொண்டிருந்தது
வேலியில் இருந்த ஓணான்



இராணுவத்தால் வெட்டப்பட்டிருந்தது வேலி
அழகாய் தெரிந்தது
பக்கத்து வீட்டு கிணற்றடி



இற்றுப் போனது கூரை
சிரித்தன
விண்மீன்கள்
 



நீ தூங்கியதால்
நான் தூங்கவில்லை
குறட்டை.



விரல்களின் நளினத்தால் விளைந்தது
நல்ல இசை
நடனமாடியது குழந்தை.
 
 



நிலவில் கூட மேடுபள்ளமுண்டு
இல்லை உன்முகத்தில்
மேக்கப்.

வல்வையூரான்.

Post Comment

10 கருத்துகள்:

  1. நொடிக் கவிதை வடிக்கும் பாவல உன்கவி
    படிகும் நமக்கு பெருகும் ஆவலே...

    அழகிய நொடிக்கவிகள். ரசித்தேன்.
    வாழ்த்துக்கள் சகோ!

    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வரவு கவிக்கும் வல்வையூரானுக்கும். நன்றிகள் சகோதரி. தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  2. அழகிய நொடிக்கவிகள். இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://tamilbm.com/ வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.

    பதிலளிநீக்கு
  3. நன்றாக இருக்கிறது உங்கள் கவிதைகள் .தொடருங்கள் .
    //பார்த்து சிரித்ததால்
    முறிந்தது
    அடுத்த வேலியின் பூவரசந்தடி //

    அனுபவம் போலும் முகுந்தன்
    நன்றிகள்
    கரிகாலன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எல்லாம் அனுபவன் கிடையாது. யாவும் கற்பனை. ஆள விடுங்கோய்யா...
      ம்ம். வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

      நீக்கு
  4. சுவையான சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்கள்

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.