சனி, 29 ஜூன், 2013

திருமண நாள்.

கடந்த பதினாறாம் தேதி (16.06.2013 ) எங்கள் திருமண நாள். அதையொட்டி எழுதியது... (ஆவணப்படுத்தலுக்காக இங்கே)


ஆனது தேதி பதினாறு
ஆகியது ஆண்டுன்னோடு பாதி பதினாறு


பாதி இங்கே!
மீதி அங்கே!!
ஆதி எங்கே?

நாதியில் தமிழினம்
தேதிகள் எண்ணுவோம்
தினம் மனதில் கூடுவோம்.


 வல்வையூரான்.

Post Comment

14 கருத்துகள்:

  1. உடலொரு பாதியாய் உயிரது மீதியாய்
    திடமாக ஈவிரும் திருமணநாள் கண்டீரே!
    சதிபதியாய் நீடூழி சந்தோசம் பெருகிடவே
    பதினாறு பேறுடனே பெருவாழ்வு வாழ்ந்திடுக!

    மணநாள் கண்ட மகிழ்வான தம்பதிகாள்!
    உளமார வாழ்த்தினேன் உவந்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உவந்தளித்த வாழ்த்தினை
      உவகையோடு பெற்றிட்டோம்
      உடகமாய் கவியதனை
      உத்தமியே வைத்திட்டீர்
      உருகி மன மகிழ்வாகி
      உரைக்கின்றோம் நன்றிகளே.

      நீக்கு
  2. இனிய வாழ்த்து(க்)கள்.

    இதே அன்போடு எந்நாளும் இருக்க எங்கள் இனிய ஆசிகள்.
    என்றும் அன்புடன்,
    துளசியும் கோபாலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகை வரவேண்டும். வந்ததே வாழ்த்தோடு, நன்றிகள் துளசி.

      நீக்கு
  3. வாழ்த்துக்கள்! தொடர்ந்து உங்கள் இல்லறம் நல்லறமாக ஒளி வீசட்டும்!

    பதிலளிநீக்கு
  4. நல வாழ்த்துகள் அண்ணா... விரைவில் சந்திப்பீர்கள்.

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.