புதன், 14 நவம்பர், 2012

ஹைக்கூக்கள் 1



கிழிக்கப்பட்டன உடைகள்
மாறியது
நாகரீகம் 




இறைவனும் தேடினான்
ஆலயத்தில்
இறைவனை 


நிரந்தர வீடு
ஏகாந்தத்திற்கு
மயானம்



ஆயுள் கைதி
விலங்குகலில்லை
திருமணம் 


புடவை கசங்கியது
தொட்டிலில்
குழந்தை 






பற்றவைக்கப்படாமலே
பற்றியது
வதந்'தீ' 



விருப்பமில்லாமல் அளிக்கப்பட்டது
தேர்தலில்
விருப்புவாக்கு 






வாயில் ரத்தச்சகதி
கையில்
வெற்றிலைச்சரை 


விழியோரம் நீர் வந்தது
வேதனை அல்ல,
வெங்காயம்.

Post Comment

15 கருத்துகள்:

  1. கவிதைகள் ஒவ்வொன்றும் இரசிக்கத்தக்கன..

    பதிலளிநீக்கு
  2. இன்றுதான் தங்கள் வலைப்பதிவுக்கு வந்தேன்..

    முதல் பதிவிலேயே என்னை இரசிக்கவைத்துவிட்டீர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டாம் கருது நீங்கள் இட்டது. ஒரு தமிழாசான் அதுவும் ஒரு முனைவர் பட்டம் பெற்றவர். மகிழ்கின்றேன் என் பதிவுப்பக்கம் வந்தமைக்காக. தொடர்ந்து வாருங்கள். மற்ற பதிவுகளையும் படித்து கருத்திடுங்கள்.

      நீக்கு
  3. வணக்கம் முதல் கருத்து ஒரு புதிய முகம் அதுவும் ஒரு பதிவு திரட்டியிடம் இருந்து. வரவேற்கின்றேன். நன்றிகள் தொடர்ந்து வருகைதாருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான ஹைக்கூக்கள் ...

    உங்களுடைய தளத்தில் உள்ள வானொலியை தானாக இயங்காதபடி மாற்றவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே. வாருங்கள். வானொலியின் ஒளி அளவு குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாருங்கள். நன்றிகள் வருகைக்கும் கருத்திடலுக்கும்.

      நீக்கு
  5. வாழ்த்துக்கள் ஐயா,
    உங்களின் பதிவுகளில் இது ஒரு மைல் கல்லாக இருக்கிறது.இன்னும் உச்சம் தொட வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. அருமை தம்பி வாழ்த்துக்கள்..!
    இம்முறை பொறுமையாக வாசிக்கமுடிந்தது..! :-)

    பதிலளிநீக்கு
  7. துளிப்பாக்கள் அனைத்தும்
    நெஞ்சம் கவர்ந்தது சகோதரரே....
    தொடருங்கள்..

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. வரவேண்டும் நண்பரே. நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு. தொடர்ந்து மற்ற ஆக்கங்களையும் பார்த்து கருத்துப் போடுங்கள்.

      நீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.