மலர்களும் வெட்கி தலைகுனிந்தன
அவை கண்டது
உந்தன் மலர்முகம்.
தனிமையில் முழுநிலவும் தகிக்கிறது
திருடிப்போனாய்
தண்மையெல்லாம்.
நேற்றுப்போலவே இன்றும் இனிக்கிறது
உன் நினைவுகள்
காதல்.
அவள் திறந்து பார்த்தது
கடிதமல்ல
என் இதயம்.
தூங்கும் போதும்
விழித்தே இருந்தது
இடம்மாறிய மனசு.
முட்கள் குத்திய போதும்
வலிக்கவில்லை - அது
காதல்.
வல்வையூரான்.
Tweet | ||||
கடைசி இரண்டும் மிகவும் சூப்பர்...
பதிலளிநீக்குநன்றிகள் அண்ணா. சந்தோசமாக இருக்கிறது உங்களைப் போன்றவர்கள் என் பக்கத்துக்கு வருவது. தொடர்ந்து வாருங்கள் அண்ணா.
நீக்குரசிக்கும்படியான ஹைக்கூக்குக்கள்...
பதிலளிநீக்குarumai
பதிலளிநீக்குநன்றிகள் பிரகலாதன். தொடர்ந்து வாருங்கள்.
நீக்கு