புதன், 12 ஜூன், 2013

ஹைக்கூக்கள் 15


கருவறைதான்
இயற்கைக்கு
மரம் காப்போம்.



பிடித்தவர்கள் அருகிலில்லை
பிடித்தது கை
கைத்தடியை.



 எரித்துவிட்டாய்
எரிவது
நானல்ல நீ.



 
என்னை நீ குடிக்கையில்
உன்னில் நான் குடிக்கும்
ரத்தமும் சிவப்பு.



ஏற்றப்பட்டது விளக்கு
எரிவது
நெருப்பே!




அழைப்பு வந்தது
அடிபட்டது
அலைபேசி மட்டும் சேதமாகவில்லை.
 


 
நான் படித்தவற்றுள்
பெறுமதியானது
நீ.
 
வல்வையூரான். 

Post Comment

15 கருத்துகள்:

  1. எரிவதும், குடித்துக் கொண்டிருப்பதும் மிகவும் அருமை... படங்களும்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. எரிவது! நெருப்பு !ம்ம் அழகான் ஹைக்கூ!ம்ம் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. அனைத்தும் அருமை!
    அதிலும் என்னைக் கவர்ந்தது...

    //நான் படித்தவற்றுள்
    பெறுமதியானது
    நீ. //

    வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக மிக அருமை
      பக்கம் பக்கமாய் எழுதினும்
      இதைப்போல "உணரும்படி " கவிதை
      அமைவது கடினமே
      மனம் கவர்ந்த கவிதை
      தொடர வாழ்த்துக்கள்

      நீக்கு
  4. சிறப்பான குறுங்கவிதைகள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.